சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது

நாகையில் விசாரணைக்காக சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், குடும்ப பிரச்சனையால் நன்னிலம் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு 15 வயது சிறுமியிடம் விசாரணை நடத்திய காவலர் அய்யாசாமி அச்சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவலர் அய்யாசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version