போக்சோ புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்க வழி வகை செய்யும் வகையில், சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. இதில், குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்கள் ஒழிக்கும் வகையில், இதில், ஈடுபடுவோருக்கு அபராதம், மற்றும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version