8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அழுதுக் கொண்டே, நடந்ததை தன் தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, குழந்தையின் தாய் மஞ்சுளாதேவி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முத்துராஜை போக்சோ சட்டத்தில், காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version