கனமழையால் கோவை ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

தொடர் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக, கோவை ரயில் நிலையத்தின், பின்புறம் உள்ள பார்சல் அலுவலகத்தின் மேற்கூரை அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version