சேந்தங்குடியில் கள்ளசாராயம் அருந்திய இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடியில் கள்ளசாராயம் அருந்திய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் மதுகடைகளை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விரக்தியடைந்துள்ள மதுப்பிரியர்கள் பலரும் போதைக்காக கள்ளசாராயத்தை தேடி அலைகின்றனர்.

சேந்தங்குடியை சேர்ந்த பிரபு, செல்வம் , வீராச்சாமி, சரத்குமார் உள்ளிட்ட 6 பேர் கள்ளச்சாரயாம் அருந்தி உள்ளனர்.

இதில் மயக்கமடைந்த பிரபு, செல்வம் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வீராச்சாமி மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் சாதரண சிகிச்சை பிரிவிலும் மற்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version