திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 6 பேர் பலியானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி ஒரு கார் வந்தது. அதை பிரகதீஸ் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஓட்டி வந்தார். அந்தக் காரில், பிரகதீசுடன் அவரது பாட்டியும், பெரியம்மாவும் பயணித்தனர். இந்தக் கார் சடையாண்டி புரம் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முதியவர் மீது மோதியது. அதன்பிறகும் நிற்காத கார், சாலைத்தடுப்புக்களை தாண்டி சாலையின் மறுபுறம் எதிரில் வந்த மற்றொரு காரின் மீது பயங்கர வேகத்துடன் மோதியது. எதிரில் வந்த காரில் இருந்த, 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதுபோல், பிரகதீஸ் காரில் இருந்த அவரது பெரியம்மாவும், பாட்டியும் அதே இடத்தில் பலியானார்கள். மேலும், சைக்கிளில் வந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரகதிஸ் உள்ளிட்ட மேலும் 2 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைப்பதாக உள்ளது.

Exit mobile version