ஸ்ரீவில்லிபுத்தூர் கூலி தொழிலாளி கொலை வழக்கு – 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளி சரவணகுமார். இவர் கடந்த 11-ம் தேதி வத்திராயிருப்பு பகுதியில் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ரமேஷ் மற்றும் கூமாப்பட்டியை சேர்ந்த தினேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் ஒரு குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version