சென்னையில் வதந்தி பரப்பிய இருவர் கைது!- காவல்துறை அதிரடி

சென்னை அடுத்த பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. விசாரணையில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார், மலையம்பாக்கத்தை சேர்ந்த பென்ஜமின் ஆகியோர் பொய்யான தகவலை பரப்பியது தெரியவந்தது. தாம் பணியாற்றும் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கும் எண்ணத்தில், சிவக்குமார் வதந்தியை பரப்பியது காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவக்குமார் மற்றும் பென்ஜமின் ஆகியோரை கைது செய்தனர்.

Exit mobile version