கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை!- இருவர் கைது

சென்னை வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள தாகூர் மருத்துவ கல்லூரியின் அருகில் அதிக விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ஒரு குப்பி ரெம்டெசிவர் மருந்து 26 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை அறிந்த காவல்துறையினர், 6 குப்பிகளை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதைப் போல, அவர்களிடம் விலை பேசினர். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விஷ்ணுகுமார் விற்பனை செய்வதை உறுதி செய்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்து 7 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவருடன் தொடர்புடைய கோவில்பட்டியில் மருந்தகம் வைத்துள்ள சண்முகம் என்பவரையும், கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version