ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், சிறார் ஆபாசப்படங்களை விற்பனை செய்த 2 பேர், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
கமுதி பகுதியில் செல்போன் கடை நடத்திவரும் சிலர், சிறார் தொடர்பான ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை காசுக்காக மாணவர்களிடம் விற்பனை செய்வதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கமுதி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து, கமுதி பேருந்து நிலையம் அருகில் உள்ள, கடையில் அதிரடி சோதனை நடத்தினர். விசாரணையில், கடையின் உரிமையாளர் பொன்னிருள் மற்றும் அவரது கடையில் பணியாற்றிய வழிவிட்டாகிழவன் ஆகியோர், சிறார் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.