திண்டிவனம் ஏசி வெடிப்பில் திடீர் திருப்பம் : மூத்த மகனும் மருமகளும் கைது

திண்டிவனத்தில் ஏசி இயந்திரம் வெடித்து 3 பேர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில், தாய்,தந்தை,சகோதரனை கொன்றதாக மூத்த மகனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ம் தேதி ஏசி இயந்திர கோளாறால் திண்டிவனம் காவேரிபாக்கத்த்தை சேர்ந்த ராஜூ,அவரது மனைவி கலைச்செல்வி, இளையமகன் கவுதமன் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. கோடையில் பெரும்பாலான வீடுகளில் ஏசி இயந்திரம் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் 3 பேர் இறந்ததாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இச்சம்பவம் திட்டமிட்ட கொலை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வெல்டிங் பட்டறை நடத்தி வந்த ராஜு, தனது சொத்துக்களை இளைய மகன் கவுதமன் பெயரில் எழுதி வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால், மூத்த மகனுடன் தகராறு இருந்து வந்ததை அறிந்த போலீசார் வழக்கை விபத்து என கருதாமல் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். அதில், மூத்த மகன் கோவர்த்தனன் திட்டமிட்டு தனது குடும்பத்தை எரித்து கொலை செய்து விட்டு, விபத்து போல சித்தரித்தது தெரிய

Exit mobile version