பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட சிபிஐ, சுஷாந்த் சிங் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டது. அவ்விசாரணையில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரவர்த்தி தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் ரியாவின் வாட்ஸ் அப்பில் இருந்து கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ரியவின் மீது போதை பொருள் தடுப்பு பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version