ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தென் தமிழகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் கையாளுவதற்கு தேவையான முயற்சிகளை
மேற்கொண்டமையாலும், சரக்கு பெட்டக முனையங்கள் திறன்பட செயல்படுவதினாலும் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் கையாளுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், 79 ஆயிரத்து 230 டன்கள் நிலக்கரியும், 52 ஆயிரத்து 200 டன்கள் சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்ட சரக்குகள் என மொத்தம், 1 லட்சத்து 80 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையை ஒரே நாளில் கடந்துள்ளது.

Exit mobile version