தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

hindu muslim vinayakar procession

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, இஸ்லாமியர்கள் இணைந்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

கடந்த 31-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட்டது. இதனையடுத்து வீடுகள் மற்றும் தெருக்களில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து கடலில் கரைப்பதற்காக புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.

Exit mobile version