தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி மீது வழக்கு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கனிமொழியின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் கோட்டுக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.

Exit mobile version