துருக்கி விமான நிலையத்தில் சுழற்காற்றில் சிக்கி விமானங்கள் பேருந்துகள் சேதம்

துருக்கி விமான நிலையத்தில் சுழற்காற்றில் சிக்கி விமானங்களும் பேருந்துகளும் சேதம் அடைந்த வீடியோ வெளியாகியுள்ளது. துருக்கியின் அண்டாலியா நகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மரங்கள் சாய்ந்ததோடு வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்தன. அன்டாலியா விமான நிலையத்தில் சுழற்காற்றால் விமானங்கள் நிலை தடுமாறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்த 12 பயணிகள் காயம் அடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரு பேருந்துகளும் சூறைக்காற்றால் புரட்டிப் போடப்பட்டு விமானம் மீது மோதி சேதமடைந்தன.

Exit mobile version