News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

‘எங்களைக் காப்பாற்றுங்கள்’…கதறும் துருக்கி மக்கள்…2300 க்கு மேற்பட்டோர் மரணம்!

Web team by Web team
February 7, 2023
in உலகம்
Reading Time: 1 min read
0
‘எங்களைக் காப்பாற்றுங்கள்’…கதறும் துருக்கி மக்கள்…2300 க்கு மேற்பட்டோர் மரணம்!

People and emergency teams rescue a person on a stretcher from a collapsed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (IHA agency via AP)

Share on FacebookShare on Twitter

நேற்று அதிகாலை துருக்கியின் தென்பகுதியில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவு சிரியாவின் வடக்குப் பகுதிவரைத் தொடர்ந்தது. இதனால் இரு நாட்டிலுமே ஏராளமான மனித இழப்புகள் மற்றும் கட்டிடங்கள்,வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. துருக்குயில் மட்டும் 2300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிரியாவில் 1,444 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை 10,000த்தை தாண்டும் வாய்ப்பு உண்டு என்று துருக்கி நாட்டின் செய்திதொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுமானியில் இந்த நில நடுக்கத்தின் அளவு 7.8 என்றும் பின் நேற்று மதியம் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தின் அளவு 7.5 ரிக்டர் அளவு என்றும் கூறப்படுகிறது. இதனால் துருக்கி நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது.

துருக்கியின் தெற்கு மாகாணம் ஹடேயில் உள்ள ஒரு பெண்மணியின் குரல் கேட்டுள்ளது. அவர் இடிபாடுகளில் சிக்கி உதவுங்கள் என்று கத்தியுள்ளார். அவர் அருகே அவரின் இறந்த குழந்தையும் இருந்துள்ளது. இது போன்று பலரின் குரல்கள் இடிபாடுகளில் இருந்து கேட்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து மக்களின் குரல் மீட்புப் படையினரின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று ஒரு மீட்பு வீரர் கூறினார். மேலும் துருக்கியிலும் சிரியாவிலும் இது பனிக்காலம். மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக வயதானவர்களின் நிலை மிகவும் பரிதாபம்.

இந்த நிலநடுக்கத்தை ஆராய்ந்த அமெரிக்க சூழலியல் நிறுவனம் ஒன்று, தென் அட்லாண்டிக்கில் ஆகஸ்ட் 2021ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு உலகம் எதிர்கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று தனது ஆய்வின் தரப்பினை சமர்பித்துள்ளது.

சிரியாவில் 1,444 நபர்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட இரு நாடுகளின் பகுதிகளிலும் இணையத்தின் சேவை முடங்கியுள்ளது.

நிலநடுக்கத்தினைப் பற்றி துருக்கி அதிபர் எர்டோகன் பேசும் போது. இது எங்கள் நாட்டிற்கு ஒரு வரலாற்று பேரழிவு என்று குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தினையும் ஆன்மாவையும் திடப்படுத்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்ட அவர், 45 நாடுகள் தங்களின் பாதுகாப்பு அணியினரை துருக்கி அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

11வருட உள்நாட்டுப் போரில் பல இழப்புகளை ஏற்கனவே சந்தித்த சிரியாவிற்கு இந்த நிலநடுக்கம் மேற்கொண்டு பெரும் துயரத்தினையே அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய சபையின் மனிதநேய கழகம் எரிபொருள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக பனிவிழும் பகுதிகளுக்கு உலக நாடுகள் எரிபொருளினை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Tags: 7.8 earthquakeearthquakesyriaTurkeyturkey earthquake
Previous Post

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

Next Post

புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்!

Related Posts

நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!
உலகம்

நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

March 16, 2023
துருக்கியில் வரும் மே 14ல் அதிபர் தேர்தல்!
உலகம்

துருக்கியில் வரும் மே 14ல் அதிபர் தேர்தல்!

March 3, 2023
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

March 3, 2023
இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?
இந்தியா

இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?

February 22, 2023
நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்.. தொடரும் நிலநடுக்கம்..இனி இந்தியாவிலும்!
இந்தியா

நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்.. தொடரும் நிலநடுக்கம்..இனி இந்தியாவிலும்!

February 21, 2023
துருக்கியில் தொடரும் துயரம்.. 45 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை!
உலகம்

துருக்கியில் தொடரும் துயரம்.. 45 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை!

February 18, 2023
Next Post
புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்!

புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version