புளி விற்பனை அதிகரிப்பு- வியாபாரிகள் மகிழ்ச்சி

கடலூரில் புளி விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் பகுதியில் உள்ள வாரசந்தையில் புளி வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து புளி மொத்தமாக வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 80 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை புளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காராமணிகுப்பம் சந்தையில் புளி விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version