பிரசார கூட்டத்தில் அதிகம் பேரை காண்பிக்க வெளியூர் ஆட்களை இறக்கிய டிடிவி ஆதரவாளர்கள்

தேனியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், டிடிவி பிரசாரத்திற்கு வரும் போது அதிகபடியான கூட்டம் இருப்பதாக காண்பிக்க வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரிக்க டிடிவி தினகரன் தேனிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகளவில் கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக வெளியூரில் இருந்து ஏராளமான வாகனங்களில் நபர்களை ஏற்றிக் கொண்டு தேனீ பங்களாமேடு பகுதியில் கூட்டத்தை கூட்டி இருந்தனர்.

ஆனால் ஆறு மணிக்கு வருவதாக கூறியிருந்த தினகரன், இரவு 9 மணிக்கு மேலாகியும் வராததால் அவரது ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டிருந்த நபர்கள் தேனியின் பல பகுதிகளில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

Exit mobile version