பேனர் கிழிப்பு விவகாரத்தில் தினகரன் உட்பட100 பேர் மீது வழக்குப்பதிவு – அமமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக, டிடிவி.தினகரன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா கடந்த 30 ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், டிடிவி.தினகரனின் தூண்டுதலின் பேரில் கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி அளித்த புகாரின்பேரில், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அமமுக 100 பேர் மீது, கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version