திருப்பதி கோவிலுக்கான அறங்காலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் நியமனம்

திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த பணிக்காக தேவஸ்தான நிர்வாகக்குழு தலைமையில் அறங்காவலர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவிற்கு புதிதாக 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து 8 பேரும், தெலங்கானாவில் இருந்து 4 பேரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதே போன்று தமிழகத்தில் இருந்து 4 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன், என்.சீனிவாசன் மற்றும் நிச்சிதா முட்டவரப்பு ஆகியோர் தமிழகத்தில் இருந்து உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version