திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக வதந்தி: 3 பேர் கைது

திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திருப்பதி மலையில் தேவாலயம் கட்டப்படுவதாக செய்தி பரவியது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதுடன் புகைப்படங்களை சித்தரித்து வெளிட்டதும் தெரிய வந்ததை அடுத்து, 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். எந்த ஒரு நிகழ்வையும் ஆராயாமல் வெளியிடுவது சட்டப்படி குற்றம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version