துபாய், இலங்கையில் இருந்து தங்கம் கடத்த முயற்சி

துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு, துபாய் மற்றும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளில் சிலர் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு கோடியே 80 லட்சம் மதிப்புடைய ஐந்தரை கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த 14 பெண்கள் உட்பட 18 பேரிடம் அதிகாரிகள் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version