ATM மையத்திற்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயற்சி

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து மூன்று இளைஞர்கள், கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் வேளிங்கை பட்டறை என்ற இடத்தில் SBI வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை மூன்று இளைஞர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அந்த மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, ரோந்து சென்ற காவலர்கள் உடனடியாக சம்பவத்திற்கு விரைந்தனர். காவலர்களை பார்த்ததும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள ஏடிஎம் கொள்ளை முயற்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version