ஆந்திராவில் இருந்து வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்து

ஆந்திராவில் இருந்து 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த லாரி, திருவள்ளூர் சுங்கச்சாவடி அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த வெங்காயம் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சாலையின் குறுக்கே பன்றி ஓடியதால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் லாரி மோதியதாக கூறப்படுகிறது.

Exit mobile version