சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

தெற்கு ஆசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய திருச்சி வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாளத்தில் தெற்கு ஆசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் திருச்சியைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் 7 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் சப்ஜுனியர் பிரிவில் குரு, சச்சின், தினகரன், லாவன்யா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதேபோன்று ஜுனியர் பிரிவில் பாலமுருகன், யாகதர்ஷினி ஆகியோர் தங்கம் வென்றனர். சீனியர் பிரிவில் சௌமியா வைஷ்ணவி, யாகதர்ஷினி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களின் சொந்தவூரான திருவெறும்பூரில் ஊர்மக்கள், பெற்றோர்கள், சிலம்பாட்ட வீரர்கள் வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Exit mobile version