திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி நிதி உதவி அளிக்கும் முன்னாள் மாணவர்கள்

திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்திற்கு ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முன்னாள் மாணவர்கள் அறிவித்துள்ளனர். 

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி என்.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள், என்.ஐ.டி மூலமாக படித்த தாங்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருவதாக கூறினார். 

ஜனவரி 4ஆம் தேதி உலக அளவில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு MGM Resort – ல்  நடைபெறுகிறது என தெரிவித்த முன்னாள் மாணவர்கள். இதில் இந்த நிதியை முன்னாள் மாணவர்கள் சார்பில்  என்.ஐ.டி கல்வி நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக  தெரிவித்தார். இதன் மூலம் 10 ஆராய்ச்சி மையங்களை திருச்சி என்.ஐ.டியில் அமைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version