திருச்சி நகைக்கடை கொள்ளை: திருடர்களை துரத்திய காவல் உதவி ஆய்வாளர்

திருச்சி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் கொள்ளையர்கள் சுவற்றில் துளையிட்டு தங்க, வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து திருவாரூரில் விளமல் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, காவலர்களை கண்டு இருவர் தப்ப முயன்றனர். அதில், ஒருவரை பிடித்தபோது,நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டிருந்த தெரியவந்தது. இந்தநிலையில், இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு, துரத்திச் சென்று பிடிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இருவரில் மணிகண்டன் என்பவரை கமலாம்பாள் நகர் பகுதியில் அவர் மடக்கி பிடித்தார். அப்போது தப்பிச் சென்ற சுரேஷ் என்ற மற்றொரு கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version