திருச்சி பள்ளி குழந்தைகளுக்கான தடகளப் போட்டி தொடக்கம்

திருச்சியில் நடைபெற்று வரும் பள்ளி குழந்தைகளுக்கான தடகளப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் துவங்கியுள்ளது. அண்ணா விளையாட்டு அரங்கில், இரண்டு நாட்கள் நடைபெறும் குழந்தைகளுக்கான போட்டியில், 34 பள்ளிகளில் இருந்து, 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version