சீரமைக்கப்பட்ட மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம்

நீலகிரி மலை ரயில் பாதை சீரமைக்கப்பட்டநிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மலை ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.

மழை மற்றும் மண்சரிவு காரணமாக கடந்த 17ம் தேதி முதல் தடைபட்ட நீலகிரி மலை ரயில் போக்குவரத்து சீரமைப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முதல் வழக்கம்போல் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. ரயிலில் பயணம் செய்ய வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மலை ரயில் போக்குவரத்து துவங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே போன்று வார விடுமுறை என்பதால் உதகை தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி சுற்றுலா வந்தவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Exit mobile version