முதன் முறையாக டீசல் என்ஜின் மூலம் மலை ரயில் இயக்கம் !

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயிலால் மலை ரயிலை இயக்குவதால் அதிகளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட பர்னஸ் ஆயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்டு, குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் நீராவி என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து மாற்றி வடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின் மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Exit mobile version