சுற்றுலா பயணிகள் மாமல்லபுர வெண்ணை உருண்டை பாறை பகுதிக்கு செல்ல தடை

பிரதமர் மோடி, சீன அதிபரின் மாமல்லபுர வருகையை முன்னிட்டு, வெண்ணை உருண்டை பாறை பகுதிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா தலத்திற்கு, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வருகை தர உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு, ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் முக்கிய இடமான வெண்ணை உருண்டை பாறை பகுதியில், புல்தரை அமைத்தல், சாலை அமைத்தல், அலங்கார மின் விளக்குகள் பொறுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Exit mobile version