கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கோவா, லட்சத்தீவு, ரத்னகிரி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான அவசரக்காலக் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இடைதேர்தல் வெற்றி மூலம் அதிமுகவிற்குத் தீபாவளிப் பரிசை மக்கள் அளித்திருப்பதாகக் கூறினார்.

Exit mobile version