போக்குவரத்துத்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி

புதுச்சேரியில், நிலுவை சம்பள தொகையை வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தொடர்ந்து 3வது நாளாக போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

புதுச்சேரியில் சாலை போக்குவரத்து கழகத்தில் 900 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிலுவையிலுள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி போனஸ் வழங்கக் கோரியும், தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததை தொடர்ந்து, 3வது நாளாக இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் புதுச்சேரியில் பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலங்களுக்கு செல்லும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Exit mobile version