போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20% போனஸ் நாளை வழங்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் நாளை வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசுப் போக்குவரத்து கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் நாளை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி முன்பணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளார்.

Exit mobile version