டெல்லியில் கடும் குளிரால் போக்குவரத்து சேவை தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் காலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்களின் வருகையும் தாமதமாகவே உள்ளன. இதே போல் ரயில்களின் வருகையும் 2 மணி நேரம் தாமதமாகி உள்ளன. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும்நிலை உள்ளது. 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

கடும் குளிரினை அடுத்து சாலையோரங்களில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான இடங்களையும் டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு கடும் குளிர் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version