அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகள் பணியமர்வு- அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதன்முறையாக திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு அமைந்துள்ளது. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 60 பிரசவங்கள் நடக்கின்றன. வருடத்திற்கு ஏறக்குறைய சுமார் 14 ஆயிரம் பிரசவங்கள் நிகழ்கின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இப்பிரிவில் மக்களின் சேவைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Exit mobile version