தாராபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில வருவாய் ஆய்வாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகிப்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நில வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version