ஆப்கானிஸ்தன் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சார்பில் சென்னை ராணுவ மையத்தில் பயிற்சி

சென்னை, ராணுவப் பயிற்சி மையத்தில் இந்திய ராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தன் ராணுவ வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 ராணுவ வீராங்கனைகளுக்கு, இந்திய ராணுவ அதிகாரிகள் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாமில், உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதப்பயிற்சி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version