தமிழகம் முழுவதும் 3.45 லட்சம் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பணியாற்ற உள்ள சுமார் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு திங்கட்கிழமை முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதுவரை 7 ஆயிரத்து 316 வாக்குச் சாவடிகள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற உள்ள 3.45 லட்சம் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நாளை அளிக்கப்படுகிறது. வரும் நாள்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Exit mobile version