முதுகுளத்தூரில் புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் 2019ம் ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் காணொலிக் காட்சிகள், குழு விவாதம், பாடல்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நடைபெற்றது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பினை, முதுகுளத்தூர் வட்டார கல்வி அலுவலர் நீலா, ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version