கும்பகோணத்தில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்குப்பதிவு அன்று மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கும்பகோணத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் 400க்கும் மேற்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில், வாக்கு பதிவு அன்று பின்பற்ற வேண்டிய பணிகள், மின்னணு இயந்திரத்தை கையாளும் விதம், மின்னணு இயந்திரத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்வது போன்றவைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

Exit mobile version