கோவில்பட்டி அருகே ஆள் இல்லாத விமானத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரி சி.கே.டி பள்ளியில் மாணவர்களுக்கு ஆள் இல்லாத விமானம், ஏவுகணை மற்றும் ரோபோக்கள் செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் ஏ.பி.ஜே.கலாம் விஷன் அமைப்பினர் செயல்முறை விளக்கம் அளித்து, மாணவர்களுக்கு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். செயல்முறை விளக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லாத விமானம் எவ்வாறு ரிமோட் மூலமாக பறக்க வைக்கப்படுகிறது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.பி.ஜே.கலாம் விஷன் அமைப்பினை சேர்ந்த குழுவினர் எடுத்துரைத்தனர். இதில் திரான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Exit mobile version