மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்!

விருதுநகரில் ராஜபாளையம் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருப்பதாக பயிற்சி பெறும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சமடம் பகுதியில் ராஜபாளையம் மாணவர் சங்கம் சார்பில் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் வாரம் தோறும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய ராஜபாளையம் மாணவர் சங்க அமைப்பாளர் பிருந்தா வெங்கடேஷ், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுவதாக கூறினார். இதில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பச்சமடம் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version