தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை ரயில் மோதி பலி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்திலிருந்து வெளியேறிய 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் யானை மீது மோதியதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து அங்குச் சென்ற ரயில்வே காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், யானை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version