ரயில் பெட்டியின் கழிவறையில் சிக்கிய பெண் பயணியின் கால் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் சார்மினார் விரைவு ரயிலில் மேற்கத்திய கழிவறையில் பெண் பயணி ஒருவரின் கால் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் சார்மினார் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது எஸ்11 பெட்டியின் கழிவறையிலிருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து சக பயணிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கழிவறை தொட்டியில் அந்த பெண்ணின் கால் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்குவந்த ரயில்வே ஊழியர்கள் கழிவறை தொட்டியை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டனர். அதையடுத்து அந்தப்பெண் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த பிஜ்ஜினிகி பாரதம்மா என்ற அந்த பெண், கழிவறையை உபயோகிக்க தெரியாமல் அதன்மீது ஏறி நின்றதால், அவரது கால் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சார்மினார் ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Exit mobile version