கொல்லம்- சென்னை எழும்பூர் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை தாம்பரம் அருகே எழும்பூர் – கொல்லம் பயணிகள் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூர் – கொல்லம் பயணிகள் ரயில் இன்று காலை சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்டபின்பு 3ம் முனையமான தாம்பரம் 11வது இருப்புப்பாதைக்கு பராமரிப்பு பணிக்காக சென்றது.

ரயிலின் இன்ஜினை கழற்றி பின்பக்கம் இணைத்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இன்ஜின் மோதியதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ரயில் ஓட்டுநர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேற்பார்வையில், ரயில்வே ஊழியர்கள் ரயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பராமரிப்புப் பணிக்காக ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் மற்ற புறநகர் ரயில்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version