பள்ளிப்பாளையத்தில் உதயநிதி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் : பயணிகள் அவதி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட பிரசாரத்திற்கு நீண்ட நேரம் தாமதமாக பிறகு இரவு 9 முப்பது மணிக்கு உதயநிதி வந்ததால், காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். பிரசாரத்தால், ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

மேலும், சேலத்தில் இருந்து ஈரோடு மற்றும் நாமக்கல்லிருந்து கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலால் நிறுத்திவைக்கப்பட்டன இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

Exit mobile version