மழை காரணமாக முறிந்து விழுந்த மரங்கள் – கொடைக்கானல் -பழனி போக்குவரத்து பாதிப்பு

மழை காரணமாக கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் பாதையில் உள்ள, ஆணைகிரி சோலை எனும் இடத்தில் மரம் முறிந்து சாலையின் நடுவே விழுந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

 

Exit mobile version