தமிழகம்-கேரளா இடையே 4 வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் கேரளா இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழியாக, கேரளாவுக்கு செல்லும் சாலைகளும், கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் சாலைகளும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. தனால், 4வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லவிருந்த 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், தமிழக கேரள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அரிசி, காய்கறிகள், போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Exit mobile version